செங்கோலை நாளை காலை பிரதமரிடம் ஒப்படைக்க உள்ள ஆதீனர்கள்

0 2098

தமிழ் பாரம்பரிய சம்பிரதாயங்களின் படி பூஜை ஹோமம் வளர்த்து தேவாரப்பாடல்கள் இசைக்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 ஆதீனர்கள் நாளை காலை பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்க உள்ளனர்.

இதற்காக திருச்சி மதுரை உள்ளிட்ட மடங்களில் இருந்து ஆதீனகர்த்தர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆன்மீகப் பண்டிதர்கள் உள்ளிட்ட 60 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் பக்தி முழக்கத்துடன் பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைக்கப்படும் நிகழ்ச்சியால் நாடாளுமன்றம் பெருமைப்படும் என்றுஆதீனர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments