புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவையொட்டி ரூ.75 சிறப்பு நாணயம் வெளியிடப்படும்-மத்திய நிதியமைச்சகம்

0 1308

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ஒட்டி 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்படும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

75 ஆண்டுகள் சுதந்திரத்தை நினைவுகூறும் வகையில் அந்த நாணயம் 75 ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற திறப்பு விழாவின்பாது பிரதமர் மோடி நாணயத்தை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நாணயம் வட்ட வடிவில், 50 சதவீத வெள்ளி, 40 சதவீத செம்பு, 5 சதவீத நிக்கல், 5 சதவீத துத்தநாகம் ஆகிய 4 உலோக கலவையில், 35 கிராம் எடையில் இருக்கும் என நிதியமைச்சகம் கூறியுள்ளது.

நாணயத்தின் ஒரு பகுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தோற்றமும், மறுபுறம் அசோக ஸ்தூபிச் சின்னமும், 75 ரூபாய் என்பதும் பொறிக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments