பப்ஜியில் அறிமுகமான 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது..!

0 1502

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி வீட்டை விட்டு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த 22 வயதான கவின் என்ற அந்த இளைஞன், சென்னையில் கார் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தான். இவனும் கும்பகோணத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் மூலம் நண்பர்களாகி உள்ளனர். நட்பு காதலாக மாற, இருவரும் கடந்த 17ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறுமியின் செல்போன் எண்ணை ட்ராக் செய்த போலீசார், அவர் சென்னையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் சென்னைக்கு சென்று இருவரையும் பிடித்து, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அப்போது சிறுமி பெற்றோருடன் செல்ல சம்மதிக்கவே, அவர்களுடன் அனுப்பி வைத்த போலீசார், சிறுமியை   அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கவினை போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments