பிரதமர் மோடியைப் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்த பிபிசிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு..!

0 2214

பிரதமர் மோடியைப் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்த பிபிசிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் சார்பில் இந்த வழக்கு பதிவாகியுள்ளது.

பிபிசி தயாரித்த அந்தத் திரைப்படம் மத்திய அரசிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்தது. காலனிய மனநிலையுடன் தயாரிக்கப்பட்ட படம் என்று சர்ச்சைகள் எழுந்தன.

பிரதமர் மோடியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க எடுக்கப்பட்டதாக அந்தப் படம் மீது மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றம் ஆவணப்படம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்க பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments