பிரதமர் மோடிக்கு சிட்னியில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு... தேசியக்கொடிகளை ஏந்தி குழுமியவர்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி

0 1570
பிரதமர் மோடிக்கு சிட்னியில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு... தேசியக்கொடிகளை ஏந்தி குழுமியவர்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி

மூன்று நாடுகள் பயணத்தின் கடைசி கட்டமாக ஆஸ்திரேலிய சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர், அங்கிருந்து பப்புவா நியூ கினியா சென்றார். அங்கு, இந்தியா - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர், சர்வதேச சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள சிறிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். அவருக்கு ஃபிஜி மற்றும் பலாவ் குடியரசின் மிக உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய புறப்பட்டுச் சென்ற பிரதமருக்கு சிட்னி விமான இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர். தேசியக்கொடிகளை ஏந்தி குழுமியிருந்தவர்கள் பிரதமருடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆஸ்திரேலியாவில் அந்நாட்டு பிரதமர் அண்டனி அல்பனீசுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ள பிரதமர், முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களையும் சந்திக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments