போதை பழக்கத்திற்கு அடிமையான மகனை, கை-கால்களை கட்டி கிணற்றில் வீசி கொன்ற தந்தை...

0 3024

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, போதை பழக்கத்திற்கு அடிமையான மகனை, கை-கால்களை கட்டி கிணற்றில் வீசி தந்தை கொலை செய்தார்.

கொட்டக்குடியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராஜபிரபு, கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. போதையில் குடும்பத்தினரிடமும், ஊர்மக்களிடம் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டிருந்த ராஜபிரபுவை, தந்தை பெருமாள் பலமுறை எச்சரித்துள்ளார்.

மகனால் மனவேதனையிலிருந்த பெருமாள், தனது உறவினர் துணையுடன் நேற்று இரவு ராஜபிரபுவை லுங்கியால் கை, கால்களை கட்டி கிணற்றில் வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுபோதையில் தனது மனைவியிடம் பெருமாள் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், தகவலின்பேரில் ராஜபிரபுவின் சடலத்தை மீட்ட போலீசார் கொலை செய்த இருவரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments