ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மனைவி, குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி தீக்குளிக்க முயன்ற தொழிலாளி

0 1433

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மனைவியையும், குழந்தையையும் கண்டுபிடித்து தரக்கோரி தொழிலாளி ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

வேலூர் மாவட்டம் கோட்டையூர் பகுதியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான ராஜீவ்காந்தி, காணாமல் போன தனது மனைவி சகுந்தலா மற்றும் ஆண் குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி பேர்ணாம்பட்டு காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளார்.

ஒன்றரை ஆண்டுகளாக காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், குறைதீர்வு மனு நாளான இன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்த ராஜீவ்காந்தியை, சத்துவாச்சாரி போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments