ரூ.2,000 நோட்டு வாபஸ் நடவடிக்கை ஏன்?: ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்

0 3760
ரூ.2,000 நோட்டு வாபஸ் நடவடிக்கை ஏன்?: ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்

2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிகமிக குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்ற போது அதன் இடத்தை விரைவாக நிரப்புவதற்காகவே 2 ஆயிரம் நோட்டுகள் முதன்மையாக அறிமுகப்படுத்தப்பட்டன என சக்திகாந்த தாஸ் விளக்கமளித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் நாணய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாக உயர்மதிப்பு கொண்ட நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர், மொத்த கரன்சி புழக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் பங்களிப்பு வெறும் 10 புள்ளி 8 சதவீதமே என தெரிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் உள்ளதால் பொதுமக்கள் அவசரப்பட வேண்டாமெனவும் சக்திகாந்த தாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments