தார் பகுதியில் அமையும் மெகா ஜவுளிப்பூங்கா பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறந்து விடும் - பிரதமர் மோடி

0 1213

மத்தியப் பிரதேச மாநிலம் தார் பகுதியில் அமையும் மெகா ஜவுளிப்பூங்கா பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வளர்ச்சிக்கான புதிய கதவுகளைத் திறந்து விடும் என்று பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தாரில் பி.எம். மித்ரா பார்க் என்ற பெயரில் பிரம்மாண்டமான ஜவுளிப் பூங்கா அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் சிவராஜ் சவுகான் டிவிட்டர் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதற்குப் பதிலளித்து மோடி தமது டிவிட்டரில் மாநில அரசுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments