உக்ரைனுக்கு 375 மில்லியன் டாலர் ராணுவ உதவிகளை வழங்குவதாக பைடன் உறுதி..!

0 1521

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், ஜி7 மாநாட்டிற்கு இடையே, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார்.

உக்ரைனுக்கு மேலும் 375 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக, இச்சந்திப்பின்போது, ஜோ பைடன் உறுதியளித்தார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த, தங்களால் முடித்த அனைத்தையும் செய்து வருவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.

முன்னதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலை தனித்தனியே சந்தித்து பேசிய ஜெலென்ஸ்கி, போரில் உக்ரைனுக்கு உதவி புரிவதற்காக நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments