பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்களுடன் ஊடுருவிய டிரோனை சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப். வீரர்கள்..!

0 1358

பாகிஸ்தானில் இருந்து இந்திய வான்வெளிக்குள் ஊடுருவிய டிரோனை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

தேடலுக்குப் பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை கண்டுபிடித்தனர். அதில் இருந்த போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

டிரோன் எழுப்பிய ஒலியை தொலைத் தொடர்பு கருவிகளின் மூலம் கேட்டறிந்து உஷாரான பாதுகாப்பு படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து டிரோனை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்ட 4 வது டிரோன் இதுவென்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments