உலகில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த 10 யோசனைகளைத் தெரிவித்தார் பிரதமர்மோடி..!

0 2030

ஜப்பான் நகரான ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர்மோடி, உலகில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த பத்து யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.

உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடும் பகுதிகளுக்கு உணவுப்பாதுகாப்புத் திட்டம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மோடி கூறினார்.

விவசாயிகளை மேம்படுத்துதல், உணவு வீணாவதைத் தடுத்தல், ஆரோக்கியம் காக்கும் சத்தான உணவுப் பொருட்கள், உரம் விநியோகிக்கும் மையங்களை அரசியலை விட்டு விலக்கி வைத்தல், உடல் நல பாதுகாப்புக்கான டிஜிட்டல் ஹெல்த் முறையை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்களை பிரதமர் மோடி தமது உரையில் கோடிட்டு காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments