ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபியிடம் புகார்..!

0 1647

அதிமுகவின் பெயர், கொடி, தலைமைக் கழக முகவரி ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்துவதை தடுக்க கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

கட்சிக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தொடர்பு இல்லாத ஒருவர் அதிமுக கொடியையும், பெயரையும், பயன்படுத்துவது ஒருவகை ஏமாற்று எனவும், இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் ஜெயக்குமார் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments