புரியிலிருந்து - ஹவுரா வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

0 1521

ஒடிசா மாநிலம் புரியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை இன்று மதியம் காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்த ரயில் 500 கிலோ மீட்டர் தூரத்தை ஆறரை மணி நேரத்தில் சென்றடையும்.

20ம் தேதி முதல் வந்தேபாரத் ரயில்சேவை தொடங்கப்படும் எனவும், வியாழன் தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஹவுரா - நியூ ஜல்பைகுரி இடையே ஏற்கனவே வந்தேபாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments