முதலமைச்சர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மீது முழு நம்பிக்கை - டி.கே.சிவகுமார்!

0 3348

முதலமைச்சர் பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மீது தமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற அவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரிலேயே பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

கட்சிக்கு துரோகம் செய்வதோ, மிரட்டுவதோ தனது பாணி அல்ல எனக்குறிப்பிட்ட அவர், மேலிடம் நல்ல முடிவை எடுக்கும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா டெல்லியில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார். நூற்றுக்கும் அதிமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவிருப்பதால் சித்தராமையாவையே முதலமைச்சராக்க வேண்டும் என அவரது தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது பற்றி விவாதிக்க காங்கிரஸ் மேலிடப்பார்வையாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு சென்றுள்ளார்.

கட்சிக்கு பாதிப்பில்லாத வகையில் இருதரப்பையும் சமாதானப்படுத்தும் திட்டத்தை காங்கிரஸ் மேலிடம் வகுத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments