கரப்பாளையம் பட்டதாரி பெண் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

0 3081

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வெல்ல உற்பத்தி ஆலையில் தொழிலாளர்கள் மீது நடைபெற்ற தீ வைப்பு சம்பவம் குறித்து ஐஜி தலைமையில் போலீசார் நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11ம் தேதி பட்டதாரி பெண் ஒருவர் ஆடு மேய்க்கச் சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட நிலையில், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய கோரியும் சிபிசிஐடி விசாரணை கோரியும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த சம்பவம் தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதல் எழுந்த நிலையில், சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தவும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கரப்பாளையம் பட்டதாரி பெண் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments