100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து... 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

0 1465

பழனி அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து ஒரு குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு வேன் ஒன்றில் சுற்றுலா சென்றுள்ளனர்.அங்கிருத்து பழனி கோவிலுக்கு செல்லும் வழியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக் குள்ளானது.

இதில் காயமடைந்தவர்கள் கயறு கட்டி மீடகப்பட்டனர். பின்னர் குழந்தைகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் பழனி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments