ஷிகானில் உள்ள பாஜக பணிமனைக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வரும்போது பாம்பு நுழைந்ததால் பரபரப்பு..!

0 1727

கர்நாடகாவின் ஷிகான் தொகுதியிலுள்ள பாஜக தேர்தல் பணிமனைக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சென்றபோது நாகப்பாம்பு ஒன்று பணிமனை வளாகத்துக்குள் நுழைந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

ஷிகான் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் தேர்தல் பணிமனைக்குச் சென்றார்.

அப்போது பணிமனை வளாகத்துக்குள் திடீரென நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது. கூட்டத்தைப் பார்த்து மிரண்டு சுற்றுச்சுவர் பக்கமாக ஓடிய நாகப்பம்பை, போலீசார் லாவகமாகப் பிடித்து, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments