காசாவில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதல்... மேலும் ஒரு மூத்த பாலஸ்தீனத் தலைவர் உயிரிழப்பு

0 2051

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் மேலும் ஒரு மூத்த பாலஸ்தீனத் தலைவர் உயிரிழந்தார்.

இதுவரை பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்தை சேர்ந்த 6 மூத்த தலைவர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் உள்ள ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மற்றும் அஷ்கெலோன் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

காசாவில் இருந்து ஏவப்பட்ட 860 ஏவுகணைகளில், 260 ஏவுகணைகளை அயர்ன் டோம் ஏவுகணை தடுப்பு அமைப்பால் இடைமறித்து அழித்தாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments