எல்லைத் தாண்டி ஊடுருவ தயார் நிலையில் 10-20 தீவிரவாதிகள் - ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு

0 1171
எல்லைத் தாண்டி ஊடுருவ தயார் நிலையில் 10-20 தீவிரவாதிகள் - ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு

எல்லைத் தாண்டி ஊடுருவ தயார்நிலையில் ஏராளமான தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே நிறுத்தி வைத்திருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து எல்லைப் பகுதியில் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 10 முதல் 20 தீவிரவாதிகள் எல்லையருகே ஊடுருவ சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நீலம் பள்ளத்தாக்கு, ஜீலம் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில்  காத்திருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் 23, 24 ஆகிய தேதிகளில் ஸ்ரீநகரில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டிற்கு இடையூறு ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments