பள்ளி ஆசிரியை கழுத்தை நெறித்துப் படுகொலை.. பணத்திற்காக கொன்றதாக உறவுக்கார இளைஞர் வாக்குமூலம்!

0 2308

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பள்ளி ஆசிரியை ஒருவர் கழுத்தை நெறித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மணப்பாடு பகுதியைச் சேர்ந்த மெட்டில்டா என்பவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். நேற்று மாலை இவர் வீட்டில் இருக்கும் போது திடீரென அலறல் சப்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து குலசேகரபட்டினம் போலீசார், மெட்டில்டா வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

வீட்டில் நடத்திய சோதனையின் போது, மாடியில் நின்று கொண்டிருந்த ஆசிரியையின் உறவுக்காரரான கன்னியாகுமரியைச் சேர்ந்த தீபக் என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மெட்டில்டாவிடம் பணம் கேட்டதாகவும், தர மறுத்ததால் கொலை செய்ததாகவும் தீபக் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments