உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் ஃபிரெஞ்ச் பத்திரிகையாளர் பலி..!

0 1724

உக்ரைனின் பக்முத் நகரில் நடைபெற்ற தாக்குதலில், ஃபிரெஞ்ச் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். 32 வயதான அர்மன் சோல்டின் AFP செய்தி நிறுவனத்திற்காக உக்ரைனில் செய்தி சேகரித்து வந்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் சண்டையின் மையப்பகுதியான பக்முத் நகரின் புறநகரில் உள்ள சாசிவ் யார் அருகே ராக்கெட் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார்.

அர்மன் சோல்டினுடன் இருந்த சக ஊழியர்கள் 4 பேர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளனர். தாக்குதலின்போது பத்திரிகையாளர்கள் அனைவரும் உக்ரைன் வீரர்களுடன் இருந்ததாக AFP செய்தி நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments