ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மீண்டும் மோதல்

0 1338
ராஜஸ்தானில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மீண்டும் மோதல்

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் தலைவர் சோனியா காந்தி அல்ல பாஜக-வின் வசுந்தரா ராஜே சிந்தியா என்பது தெளிவாக தெரிவதாக சச்சின் பைலட் விமர்சித்துளார்.

அசோக் கெலாட் உடன் மீண்டும் மோதல் முற்றியுள்ள நிலையில் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலாட், பாஜக தலைவர்களை புகழ்வதும், காங்கிரஸ் தலைவர்களை அவமதிப்பதும் முற்றிலும் தவறு என்றார்.

ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசு மீது ஊழல் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அசோக் கெலாட்டால் ஏன் முடியவில்லை என்று பைலட் கேள்வி எழுப்பினார்.

வரும் 11ம் தேதி முதல் அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரை 5 நாட்களுக்கு 'ஜன் சங்கர்ஷ் யாத்திரை' நடத்தவுள்ளதாகவும், இந்த யாத்திரை ஊழலுக்கு எதிரானது என்றும் சச்சின் பைலட் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments