கேரள படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் பினராயி விஜயன்

0 2039

கேரள மாநிலம் மலப்புரம் அருகே படகு விபத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் நீந்தி கரை சேர்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று காலை நேரில் சென்று நலம் விசாரித்த கேரள முதல்வர், சிகிச்சை பெறுவோருக்கான மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என்றும், படகு விபத்து குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments