மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னோக்கி சென்ற விவசாயிகள்!

0 1367

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவளிக்க, போலீஸ் தடுப்புகளை உடைத்துக்கொண்டு விவசாயிகள் முன்னோக்கி சென்றனர்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மல்யத்த சம்மேளனத் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷணை கைது செய்ய வலியறுத்தி  டெல்லி ஜந்தர் மந்தரில்  மல்யுத்த வீரர்கள் 16ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் போராட்டத்திற்கு பாரதிய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், வீரர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட அந்த சங்கத்தின் விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர்.

ஆனால் அவர்களை போராட்ட இடமான ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். இந்நிலையில், அந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு விவசாயிகள் ஜந்தர் மந்தர் நோக்கி படையெடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments