தென் அமெரிக்க நாடான பெருவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு!

0 2246

தென் அமெரிக்க நாடான பெருவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

அரேக்யூபா நகரில் இயங்கிவந்த லா எஸ்பெரான்சா சுரங்கத்தில் சனிக்கிழமை காலையன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

300 அடி ஆழத்தில் பணியாற்றிய போது மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதால், தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தால், சுரங்கம் முழுவதுமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு, 2 பேரை தீயிலிருந்து மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments