மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய விவசாய சங்கத்தினர்.. மே 21ம் தேதிக்குள் பிரிஜ் பூஷனைக் கைது செய்ய விவசாயிகள் கெடு!

0 1954

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷணை வரும் 21ம் தேதிக்குள் கைது செய்யாவிட்டால் முக்கியமான முடிவு எடுக்கப்படும் என பாரதிய கிசான் யூனியன் என்ற விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர்கள் ஒன்றிணைந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு விவசாய அமைப்பு வெளியில் இருந்து ஆதரவு தரும் என்று குறிப்பிட்டனர்.

மே 21ம் தேதிக்குள் அரசு முடிவெடுக்கவில்லை என்றால், தாங்கள் அடுத்த வியூகத்தை வகுப்போம் என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்குப் பின்னால் நிற்கும் என்றும் அவர்கள் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments