கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

0 4523


கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில், 21 பேர் உயிரிழந்தனர்.

தானூர் கடற்பகுதியில் 35 பயணிகளுடன் சென்ற படகு, திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலில் மூழ்கி 5 குழந்தைகள், பெண்கள் உள்பட 21 பேர் பலியாகினர். 8 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இரு அடுக்குகளை கொண்ட, அப்படகில் 2 கதவுகள் இருந்தும், படகு கவிழ்ந்த பின், உள்ளே இருந்தவர்களால் வெளியே வரமுடியவில்லை என விபத்தில் உயிர்பிழைத்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments