கல்குவாரியில் பாறைகளை அகற்றும் பணியின்போது மண் சரிவு... பொக்லைனுடன் மண்ணில் புதைந்த தொழிலாளரை மீட்கும் பணி தீவிரம்...!

0 1796

புதுக்கோட்டை மாவட்டம் ராக்கத்தான்பட்டியில் கல்குவாரியில் பாறைகளை அகற்றும் பணியின்போது மண் சரிவு ஏற்பட்டு, மண் அள்ளும் வாகனத்துடன் புதைந்த நபரை தீயணைப்புத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தனியாருக்குச் சொந்தமான இந்த கல்குவாரியில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

லட்சுமணன் என்ற இளைஞர் வெடிவைத்து தகர்க்கப்பட்ட பாறைத் துண்டுகளை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இயந்திரத்துடன் மண்ணில் புதைந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments