மணிப்பூரில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 23,000 பேர் மீட்பு

0 1361
மணிப்பூரில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 23,000 பேர் மீட்பு

மணிப்பூரில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை பொதுமக்கள் சுமார் 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, இராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில், டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேநேரம், சுராசந்த்பூர் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை ஊரடங்கில் சிறிது தளர்வளிக்கப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கடைகளில் இருந்து வாங்கிச்சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments