அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரயிலை கல்வீசி தாக்கிய மர்மநபர்கள்..!

0 10201

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசியதில் ரயிலின் கண்ணாடி சேதமடைந்தது.

மகேந்திரவாடி- அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று மாலை மைசூருலிருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் ரயிலின் பக்கவாட்டு கண்ணாடி சேதமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ரயில் சென்னை சென்ட்ரலை அடைந்ததும், இது பற்றிய புகார், காட்பாடி ரயில்வே போலீஸார் மற்றும் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments