திகார் சிறையில் கைதிகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும்படி சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

0 1342

டெல்லி திகார் சிறையில் ரவுடிகளிடையே கோஷ்டி மோதல் வலுத்து தில்லு தாஜ்புரியா என்ற ரவுடி 100 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து சிறையில் உள்ள இதர ரவுடிகளுக்கு உயிரச்சம் ஏற்பட்டுள்ளது. தீபக் பாக்சர் என்ற மற்றொரு பிரபல தாதா தம்மை திகார் சிறையில் இருந்துவேறு சிறைக்கு மாற்றும்படி கோரி விண்ணப்பித்துள்ளார்.

தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தீபக் பாக்சருக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும்படி பாட்டாலியா ஹவுஸ் நீதிமன்றம் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே சிறையில் அதிரடி மாற்றங்களையும் வார்டன்களின் இடமாற்றங்களையும் செய்து வரும் உயர் அதிகாரிகள் கைதிகளின் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் சிறப்புக் குழுவை அமைத்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments