கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணாவின் மனைவியை பின்தொடர்ந்த 2 பேர் கைது..!

0 2480

கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணாவின் மனைவியை காரில் செல்லும் போது பைக்கில் பின்தொடர்ந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராணாவின் மனைவியான சாச்சி மார்வா டெல்லி கீர்த்தி நகரில் உள்ள அலுவலகத்தில் தமது பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது பைக்கில் வந்த இரண்டு பேர் அவர் கார் மீது மோதி ரகளை செய்தனர்.

தமது செல்போனில் இருவரின் முகங்களையும் படம் பிடித்த சாச்சி அதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் அந்த இரண்டு பேரையும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக அடையாளம் கண்டுபிடித்து இருவரையும் வீடுகளுக்கு சென்று கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments