காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் கமாண்டோ படைத்தலைவர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

0 1211

பஞ்சாப் பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தின் கமாண்டோ படை தலைவர் பரம்ஜித் பஞ்சவார் பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியாவின் பஞ்சாப் எல்லை அருகே அமைந்துள்ள லாகூர் நகரில் துப்பாக்கி ஏந்திய இரண்டு பேர் பரம்ஜித் சிங்கின் வீட்டுக்கு அருகே அவரை சுட்டுக் கொன்றனர்.அவருடைய காவலர் ஒருவரும் காயம் அடைந்தார். 59 வயதான பரம்ஜித் சிங் மீது பிரிவினைவாதம் கொலை, போதைப் பொருள் ஆயுதம் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments