மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!

0 6976

மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று சித்ரா பவுணர்மியையொட்டி, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து தங்கக்குதிரையில் வந்த கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து இன்று காலை வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், வைகை ஆற்றில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments