ஒரே நேரத்தில் கருவுற்ற தங்களது மனைவிகளின் மருத்துவச் செலவுக்காக திருடர்களாக மாறிய நண்பர்கள்

0 3030

சென்னையில் ஒரே நேரத்தில் கருவுற்ற தங்களது மனைவிகளின் மருத்துவச் செலவுக்காக திருடர்களாக மாறிய நண்பர்கள் இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார், சென்னை ஆதம்பாக்கத்தில் தங்கி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 22ஆம் தேதி மனைவியின் வளைகாப்பு நிகழ்வுக்காக சொந்த ஊர் சென்றவர் 4 நாட்கள் கழித்து திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த பொருட்கள், நகைகள் திருடுபோனது தெரியவந்தது.புகாரின் பேரில் போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு பெருங்குடியைச் சேர்ந்த அப்பு ரஞ்சித் என்பவனையும், அவனுடைய நண்பன் ரஞ்சித் என்பவனையும் கைது செய்தனர்.

விசாரணையில் இருவரது மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்ததும் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல், அப்பு ரஞ்சித்தின் குழந்தை கருவிலேயே கலைந்ததும் தெரியவந்தது.

ரஞ்சித்தின் மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில், தாயையும் சேயையும் பராமரிக்கப் பணம் இல்லாததால் இருவரும் சேர்ந்து திருட முடிவெடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments