துருவ் ஹெலிகாப்டர் பயன்பாடு நிறுத்தம் - இந்திய ராணுவம் அறிவிப்பு

0 1534

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இலகு ரக துருவ் ஹெலிகாப்டரின் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துருவ் இலகு ரக ஹெலிகாப்டர், கடந்த மே 4-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஏற்கனவே, இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையில் பயன்படுத்தப்பட்ட துருவ் இலகு ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனால் கடந்த ஒரு மாதமாக துருவ் இலகுரக ஹெலிகாப்டர் பயன்பாட்டை கடற்படை நிறுத்தியது. தற்போது, இந்திய ராணுவமும் துருவ் ஹெலிகாப்டர் பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments