சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் ஆபரேசன் காவேரி நடவடிக்கை நிறைவு - வெளியுறவு அமைச்சகம்

0 1157

சூடானில் இருந்து 3800க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆபரேசன் காவேரி திட்டம் மூலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்,சூடானில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரில் பிரச்சாரத்துக்கு இடையே  இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டு மக்கள் துன்பத்தில் தவிப்பதை தம்மால் காண முடியவில்லை என்றார்.

மிகப்பெரிய நாடுகள் கூட தங்கள் குடிமக்களை சூடானில் இருந்து வெளியேற்ற தயங்கிய நிலையில், இந்தியா துணிவுடன் தனது குடிமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார்.

விமானத்தால் நெருங்க முடியாத பகுதிகளில் இருந்தும் இந்தியர்கள் மீட்கப்பட்டதாகக் கூறிய பிரதமர் இது போன்ற கடினமான நேரங்களில் கூட அரசுக்கு காங்கிரஸ் ஆதரவாக செயல்பட்டது இல்லை என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments