தீவிரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் வகையில் 'தி கேரளா ஸ்டோரி' படம் எடுக்கப்பட்டுள்ளது - பிரதமர்

0 2222

தீவிரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் வகையில் 'தி கேரளா ஸ்டோரி' படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு வங்கிக்காக அப்படத்தை காங்கிரஸ் எதிர்ப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவின் பெல்லாரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர், சூடானில் நிலவிய சூழலால் அந்நாட்டில் இருந்து தங்களது குடிமக்களை மீட்க பெரிய நாடுகளே மறுத்த நிலையில், மத்திய அரசு இந்தியர்களை மீட்டதாக பெருமிதத்துடன் கூறினார்.

சூடான் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யவே காங்கிரஸ் விரும்பியதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினர். கர்நாடகாவின் வளர்சிக்கானதாக பாஜக தேர்தல் வாக்குறுதிகள் அமைந்துள்ளதாகவும், காங்கிரசின் வாக்குறுதிகள் பொய்கள் நிறைந்ததாக உள்ளது என்றும் மோடி சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments