உக்ரைனில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் - 21 பேர் பலி

0 1258

உக்ரைனின் கெர்சன் நகரில் ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.

கிரெம்ளின் மாளிகையில் ட்ரோன் தாக்குதல் நடத்தி ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சித்ததாக உக்ரைன் மீது குற்றஞ்சாட்டியுள்ள ரஷ்யா, உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கெர்சனில் உள்ள ரயில் நிலையம், பல்பொருள் அங்காடி மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தோடு, 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கீவ் மற்றும் ஒடேசா நகரங்களை தாக்க முயன்ற ரஷ்யாவின் 18 காமிகேஸ் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments