உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து வெளியேறி வரும் பொதுமக்கள்

0 1246

ரஷ்யாவின் தாக்குதலையடுத்து உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் வெளியேறிவருகின்றனர்.

ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த நிலையில், ரயில் நிலையம் மற்றும் குடியிருப்புகளும் சேதமடைந்தது. இதனையடுத்து குடியிருப்பாளர்கள் நகரில் இருந்து வெளியேற உள்ளூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

கெர்சன் மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த 4 நாட்களில் 3-வது முறையாக உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து இன்று ரஷ்யா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், 24 காமிகேஸ் ட்ரோன்களில் 18 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments