முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு..!

0 1682

புதுக்கோட்டையில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது கம்பத்தில் முட்டியதில் மயங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்தது.

வடசேரிப்பட்டியில் 2ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது மயங்கிய கருப்பு கொம்பன் காளை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தது.

ஏற்கனவே திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது விஜயபாஸ்கரின் கொம்பன் காளை இதேபோன்று வாடிவாசல் கம்பத்தில் முட்டி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments