செர்பியாவில் பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்!

0 1121

செர்பியாவில் பள்ளிக்குள் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் எட்டு மாணவர்கள் ஒரு பாதுகாவலர் என 9 பேர் உயிரிழந்தனர்.

தலைநகரான பெல்கிரேடில் நடைபெற்ற இத்துயர சம்பவத்தில் மேலும் பல மாணவர்களும் ஆசிரியர்களும் காயம் அடைந்துள்ளனர்.

ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கியை எடுத்து தனது ஆசிரியரை சுட்டதாகவும் பின்னர் சக மாணவர்கள், பாதுகாவலர் உள்ளிட்டோரை சுட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு மாத காலமாகத் திட்டமிட்டு படுகொலையை அரங்கேற்றியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments