டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் மீது போலீசார் தடியடி!

0 1712

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 11 நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
breathe
பகலெல்லாம் கொட்டிய மழையால் அவதிப்பட்ட போராட்டக்காரர்கள் இரவில் அமைதியாக உறங்குவதற்காக ஆம் ஆத்மி கட்சி கயிற்றுக்கட்டில்களை ஏற்பாடு செய்து தந்தது. ஆனால் போலீசார் கட்டிலைக் கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ஏராளமான வீரர் வீராங்கனைகள் தாக்கப்பட்டு காயம் அடைந்ததாகவும் ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்தனர்.

சில முன்னணி வீராங்கனைகள், குடிபோதையுடன் வந்த போலீசாரால் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments