பொள்ளாச்சி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை

0 4887

கோவை பொள்ளாச்சி அருகே அடுக்குமாடி குடியிருப்பில், கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக் கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே கோட்டாம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து நேற்றிரவு அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடிச் சென்று பார்த்தனர்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சுஜய் என்பவரின் வீட்டில் இளம்பெண் ஒருவர் உடல் முழுதும் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். போலீசாருக்கு தகவல் தெரிவித்து இளம்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்குள் அவர் உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் சுப்புலஷ்மி, தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதுவும், சுஜய் என்பவரின் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், அவரது வீட்டிற்கு அழைத்து வந்து மாணவியை சுஜய் கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

சுஜய் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு மாணவி சுப்புலஷ்மியை காதலித்து வந்துள்ளதாக கூறும் போலீசார், இது தொடர்பான பிரச்சனையில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகித்து கொலை செய்த நபரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments