சூடானில் கடும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவமும் ஏழு நாள் போர் நிறுத்தம்!

0 2372

சூடானில் கடும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவமும் ஏழு நாள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளன.

இருதரப்புக்கும் இடையே நீடித்து வரும் மோதல் காரணமாக இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.

இந்நிலையில் தென் சூடானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இருதரப்பிலும் சமாதானப் பேச்சுகளுக்காக பிரதிநிதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகவும், அவர்கள் விரும்பும் இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை சூடானை விட்டு 73 ஆயிரம் பேர் வெளியேறி விட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஒருவார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் போதும் அது கடைபிடிக்கப்படுமா என்பது உறுதியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments