திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ரவுடி 100 முறை கத்தியால் குத்திக் கொலை!

0 2085

திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி சுனில் தில்லு தாஜ்புரியாவை சக கைதிகள் நூறு முறை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.

சிறை அலுவலர்கள் 15 , 20 நிமிடங்கள் கழித்துதான் ரத்த வெள்ளத்தில் இருந்த அவர் உடலை மீட்டனர்.ஜித்தேந்தர் கோகி கோஷ்டியைச் சேர்ந்த  4 பேர் கொண்ட கும்பலால் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கோகி  ரோஹினி நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2014ம் ஆண்டு தாஜ்புரியாவின் கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மூன்று வாரங்களுக்கு முன்பு பிரின்ஸ் தவத்தியா என்ற ரவுடியும் எதிரிகளால் திகார் சிறைக்குள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments