"ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - மத்திய அரசு அறிவுறுத்தல்!

0 1029

ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான் விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா எழுதியுள்ள கடிதத்தில், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள், ஓ.டி.டி. நிறுவனங்களும் ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையதளங்கள் மட்டுமின்றி மீடியா, அச்சு ஊடகங்களிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியாவதால் மத்திய அரசு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments