திகார் சிறைக்குள் டெல்லியின் முக்கிய தாதா அடித்துக்கொலை

0 1705

டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா சிறைக்குள்ளேயே அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

டெல்லி ரோகினி நீதிமன்றத்திற்குள் கோகி என்ற தாதா கடந்த 2021-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு சிறைக்குள் இருந்தபடி தில்லு தாஜ்புரியா என்ற மற்றொரு தாதா சதித் திட்டம் தீட்டினார் என்பது போலீசாரின் சந்தேகம். இந்நிலையில், திகார் சிறையில் இருந்த தாஜ்புரியாவின் அறைக்கு மேல் மாடியில் இருந்த யோகேஷ் துண்டா தலைமையிலான 4 பேர், ஜன்னலை உடைத்து, போர்வையை கட்டி கீழே இறங்கியுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த தாஜ்புரியாவின் அறைக்கு வந்த அவர்கள், இரும்பு கம்பிகளால் தாதாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உடலில் 92 இடங்களில் காயம் ஏற்பட்டு தாஜ்புரியா உயரிழந்தார்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திகார் சிறையில் கடந்த ஒரே மாதத்தில் நடந்துள்ள இரண்டாவது கொலை இதுவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments