பிறந்த நாள் இறந்த நாளாகிய சோகம்.... பாலாற்றில் மதுபோதையில் குளித்த கல்லூரி மாணவர் பலி..!

0 2497

செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தின் கீழே ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கைப் பலகையை பொருட்படுத்தாமல் மது போதையில் குளித்த கல்லூரி மாணவன் தனது 19-வது பிறந்த நாளன்றே உயிரிழந்தார்.

பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான மோகன்ராம், பிறந்தநாளையொட்டி நண்பர்களுக்கு இருங்குன்றப்பள்ளி பம்ப் அவுஸ் அருகே மது விருந்து அளித்ததாக கூறப்படுகிறது. சுற்றி அனைத்து இடங்களிலும் வறண்டு கிடந்தாலும், குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் குளம் போல தேங்கி உள்ளது.

அதில் இறங்கிக் குளித்த பலர் ஏற்கனவே இறந்துவிட்டதால், ஆபத்தான பகுதி என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதை பொருட்படுத்தாத மோகன்ராம், நீச்சல் தெரியாத போதிலும் மது போதை தலைக்கு ஏறி தண்ணீரில் இறங்கியதாக தெரிகிறது.

சற்று நேரத்தில் அவர் நீரில் மூழ்கியுள்ளார். அவரது நண்பர்கள் கூச்சலிட்டதைக் கேட்டு, அப்பகுதியில் இருந்த சிலர் மூச்சுப் பேச்சு இல்லாத மோகன்ராமை நீரில் இருந்து வெளியே இழுத்துள்ளனர்.சோதித்துப் பார்த்ததில் அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments